2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு 

2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

By DIN

chemistry_nobel_-_2018

 

ஸ்டாக்ஹோம்:  2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது புரோட்டீன்கள்  குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பும், செவ்வாயன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர்.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது புரோட்டீன்கள்  குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜ் ஸ்மித், பிரான்ஸின் பிரான்செஸ் அர்னால்டு மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிகோரி வின்டர் ஆகிய மூவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.

புரோட்டீன்கள்  குறித்த புதிய ஆய்வுகளின் வழியாக மனித குலத்திற்கு உதவும் வகையில் உணவுப் பொருட்களை கண்டறிய உதவியதாக அவர்களுக்கு இந்த விருதானது பகிர்ந்து வழங்கப்படுகிறது.