நோபல் பரிசு 2017
இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு வென்றிருப்பவர் கசுவோ இஷிகுரோ. பெயரைப் பார்த்ததும் ஜப்பானிய மொழி எழுத்தாளர் என்று தோன்றும். இவர் ஆங்கில எழுத்தாளர். புக்கர் பரிசை வென்றவர். மேலும், மூன்று முறை புக்கர் விருதுக்கான பட்டியலில் இவரது நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.